உற்சாகத்தில் மக்கள்..சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் 2 வாரங்களுக்கு தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது.

மேலும் இந்த ஊரடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன.

மேலும் இன்று முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க அரசு அனுமதித்தது.உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள், கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன.

மேலும் இதில் தனிமனித இடைவேளை ,முகக்கவசம் ஆகியவை பின்பற்றப்படுகின்றன.