கேரளா, புதுச்சேரியிலும் இன்று முதல் ஊரடங்கு

புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் சந்தைகளை திறந்த வெளியில் மாற்றவும், மாலை 5 மணிக்கு கடற்கரையை மூடவும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் 23686 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில் 240 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு வார முழு ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது.