மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்

உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை முடிந்து இன்று  டிச்சார்ஜ் செய்யப்பட்டார்.

குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது.

மேலும், அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.