இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் படி பிஎஸ்இ குறியீட்டு எண் 280.15 புள்ளிகள் அல்லது 0.56 சதவீதம் அதிகரித்து 50,051.44 ஆக முடிந்தது. என்எஸ்இ நிஃப்டி 78.35 புள்ளிகள் அல்லது 0.53 சதவீதம் அதிகரித்து 14,814.75 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி அல்ட்ராடெக் சிமென்ட் சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் மாருதி ஆகியவை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளன.

ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட், ஐ.டி.சி, என்டிபிசி, எம் அண்ட் எம் மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.

எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை லாபத்தில் இருந்ததால் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 280 புள்ளிகள் உயர்ந்தது.