புதிதாக உருவான ஒகேனக்கல் அருவி

ஆலங்குடி அருகே மழைநீர் ஒரு பள்ளத்தாக்கில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டி ஒகேனக்கல் போல் காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இந்த தண்ணீர் பள்ளத்திவிடுதி அருகே உள்ள கல்லோடை என்ற பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் அருவிபோல் கொட்டுகிறது.

இது பார்ப்பதற்கு ஒகேனக்கல் அருவி போல் காணப்படுகிறது. புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவியில் கொட்டுவது போல் தண்ணீர் பிரிந்து பல்வேறு இடங்களில் கொட்டி வரும் அழகை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். இன்னும் மழை அதிகமாக பெய்தால் இப்போது சிறிய அளவில் அருவி போல் கொட்டும் தண்ணீர் மேலும் நான்கு இடங்களில் பிரிந்து அருவிபோல் கொட்டுவது ஒகேனக்கலை பார்ப்பது போல் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்