விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்- மோடி

விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டார்.

மண்டி முறைகள் குறித்து மற்றொரு பொய்யுரைக்கப்படுவதாகவும், புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தபிறகு ஒரு சந்தை கூட முடப்படவில்லை என்றும் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். பண்ணை ஒப்பந்த முறை குறித்தும் தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், பண்ணை ஒப்பந்தம் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.விவசாயிகளின் ஒவ்வொரு சந்தேகத்தையும், கவலைகளையும் தீர்த்து வைக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.