கடந்த 24 மணி நேரத்தில் 2089 பேருக்கு புதிதாக கொரோனா..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2089 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1241 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 775 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், கோவையில் 185 பேருக்கும் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,77,279 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,659 ஆக அதிகரித்துள்ளது.