தமிழகத்தில் புதிய கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் !

தமிழக அரசு கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வரும் திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பாஸ் கட்டாயம்.

மேலும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.சலூன்கள் ,அழகு நிலையங்கள் இயங்க அனுமதியில்லை .அனைத்து உணவகங்களும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி .

உணவகங்களில் உட்காந்து சாப்பிட அனுமதி இல்லை பார்சலுக்கு மட்டும் அனுமதி.பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.இறுதி ஊர்வலத்தில் 25 பேர் மட்டுமே அனுமதி .திருமண விழாக்களில் 50 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி.

வீட்டை விட்டு வெளியே செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.