கரோனா தொற்று பரவல் தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது.தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் தற்போது இன்று இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.
நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.மேலும் சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த 30 மணி நேரம் தொடரும் ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.