முதல் தடுப்பூசியை எடுக்க தயார் – இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கரோனா தடுப்பூசியை முதல் நபராக பெறத் தயாராகியுள்ளார்.மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக தானே தடுப்பூசியை பெற முடிவுசெய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தனிமைப்படுத்தல் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்தநாள் கரோனா தடுப்பூசியை முதல் நபராக ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளேன்.

இதன்மூலம் மக்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ ஆசைப்படுகிறேன். வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மில்லியன் கணக்கான டோஸ் இஸ்ரேலியர்களுக்குத் தயாராக இருக்கும். தடுப்பூசி போடுவதில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என அறிவித்துள்ளார்.