நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் ஜான்கேபே என்ற டவுண் பள்ளியில் இருந்து 317 பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீதும் அவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இறைவன் தான் எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகின்றனர்.
மேலும் இதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட அரசு அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டனர்.அவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.