தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா !

கரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இந்த உலகை உலுக்கி வருகிறது.இதனை தடுக்க தடுப்பூசி போட்டுகொள்ளுவது அவசியம்.

தற்போது ,ஒரே நாளில் சுமார் 1.4 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.4 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 40 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.