நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ உரிமம் 25 கோடிகளுக்கு விற்பனை..!

2011-ல் தென்கொரியாவில் வெளியான blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் பார்வையை இழக்கும் பெண் போலீஸ் அதிகாரி எப்படி ஒரு சைக்கோ கொலைகாரனை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை. அதனை நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராய் இயக்க, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

கொரோனா சூழல் நிலவி வருவதால், கடந்தாண்டு முதல் திரைப்படங்கள் பெரும்பாலும் ஓடிடி-யை நோக்கி படையெடுக்கின்றன. தற்போது தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கூட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படமும் ஓடிடி-யில் வெளியாகிறதாம். அங்கு படத்தில் உரிமம் 25 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.