நவராத்திரி விழா: கங்கனா வாழ்த்து

நடிகை கங்கனா ரனாவத் நவராத்திரி விழாவை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இருக்கும் விரதங்களில் ஒன்று நவராத்திரி விரதம். மொத்தம் ஒன்பது நாள்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று (அக். 16) தொடங்கிய இவ்விழா அடுத்த வாரம் சனிக்கிழமை (அக். 24) வரை நடைபெறவுள்ளது. இந்நாளில் பலரும் தங்களது வீடுகளில் பொம்மை வைத்து கொண்டாடுவர்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் நவராத்திரி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”சிவன் ஒன்றுமே இல்லை. சக்தி என்பதுதான் நமது ஆற்றலில் மிகவும் முக்கியமானது. சக்திதான் அனைத்துமே” என்று குறிப்பிட்டுள்ளர்.