நாட்டு வைத்தியத்திற்கு திரும்பிய பொதுமக்கள்

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாட்டு வைத்தியத்திற்கு திரும்பிய பொதுமக்கள், நாட்டு மருந்து கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருவதால் 20% விற்பனை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் தொற்று என்பது 30,000-த்தைக் கடந்து வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று எண்ணிக்கை 5,000மாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதால், மக்கள் தங்களை காத்து கொள்ளவும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  இயற்கை மருத்துவத்திற்கு திரும்பியுள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு  சக்தி அதிகரிக்கவும், சளி தொற்று ஏற்படாதவாறு கசாயம் வைத்து குடித்து வருகின்றனர். இதனால் மூலப் பொருள்களை வாங்குவதற்கு நாட்டு மருந்து கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.