நலமாக உள்ளார் தங்கமகன் நீரஜ் சோப்ரா !

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.இதில் இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை வென்று தந்தவர் நீரஜ் சோப்ரா.இந்த முறை இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது.

ஒலிம்பிக் போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்தியா வந்த நீரஜ் சோப்ரா காய்ச்சல் காரணமாக பானிபட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஒலிம்பிக் தங்கத்தை வென்று தந்தவர் நீரஜ் சோப்ரா.தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லியில் பல்வேறு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டார். இறுதியாக, அவர் பானிபட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள தனது சொந்த கிராமமான கந்த்ரா கிராமத்தில் வீடு திரும்பினார்.

நீரஜ் சோப்ராவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையில் கோவிட் நெகடிவ் என்று தெரியவந்தது.தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. நான் சரியான கவனிப்பை எடுத்துக்கொள்கிறேன், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.