ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

தென்னிந்திய இசை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவருமான ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (டிச.28) காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினரும், ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.