மகளிர் ஹாக்கி வீராங்கனைகளுக்கு ரூபாய் 31 லட்சம் பரிசு !

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன.இதில் இந்தியாவுக்கு 7 பதக்கங்களுடன் 48 வது இடம் கிடைத்துள்ளது.இரண்டு வாரங்கள் நடைபெற்ற போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.ஆனால் சிறப்பாக கடைசி நிமிடம் வரை இங்கிலாந்து அணியுடன் மோதியது.

சிறப்பாக ஆடியதால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ.31 லட்சம் வழங்கி கவுரவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.மேலும் எதிர்காலத்தில் மகள்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.