மோடியின் அலுவலகம் – ஓஎல்எக்ஸில் விற்பனை!

வாரணாசி மக்களவை தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் உள்ள அவரது அலுவலகம் தற்போது ஓஎல்எக்ஸில் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு விடப்பட்டது. பிரதமரின் எம்பி அலுவலகம் விற்பனைக்கு விடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 4 பேரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு இதுகுறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து, இணையதளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது. நான்கு அறைகள், நான்கு பாத்ரூம்கள் கொண்ட வில்லா விற்பனைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.