தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
- காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
- அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.