மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.

மேலும் அவர், “1 முதல் 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10,11, 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் பாடத் திட்டத்தை 50 சதவீதம் வரை குறைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது