முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி !

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 வயதான மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்மோகன் சிங்கிற்கு முன்னதாக, காலையில் லேசான காய்ச்சல் இருந்தது. பின்னர் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் குணமைடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். நீங்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேவை என்று கூறியுள்ளார்.