எருமை மீது உட்கார்ந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!!!

பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய எருமை மீது சவாரி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் .எனவே மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் எனது பணியை சிறப்பாக செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் எருமை மாடு மீது சவாரி செய்ததால் அவர் மீது பசுவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.