மகா சிவராத்திரி விழா..!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 12 சிவாலயங்களை, ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓடி வருகின்றனர்.