சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. இது அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பா.ஜ.க.வுக்கும், குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது. காரணம், அத்தொகுதியில் பா.ஜ.க. பொறுப்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டது தான்.

இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு தான் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.வுக்கு, அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. இது அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பா.ஜ.க.வுக்கும், பம்பரம் போல சுழன்றி தேர்தல் பணியாற்றிய குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.