ஒலிம்பிக்கில் மதுரையை சேர்ந்த வீராங்கனை தேர்வு !

ஒலிம்பிக் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

தற்போது மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி.ஜூனியர் – சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி டோக்கியோ செல்கிறார்.

இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 4x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள இவர் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடக்கூடியவர்.