கொரோனாவால் உயிரிழந்தால் ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும்

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், 5 லட்ச ரூபாயும் நிதியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். முன்னதாக, டெல்லி மாநில அரசு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.