டெல்லியில் மே 3 வரை தொடரும் ஊரடங்கு !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்கி வருகிறது.தற்போது மகாராஷ்டிரா,டெல்லி,தமிழகம்,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகம் இருக்கிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக டெல்லி மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் நாளை முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.