ஜப்பான் நாட்டில் பலத்த மழையால் நிலச்சரிவு !

ஜப்பானின் ஷிஜூவோகா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இன்று காலை 10:30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன.இதில் 20 கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தகவல் வெளியாகிறது.

அங்கு இருக்கும் ஹாட் ஸ்பா ரிசார்ட்டுகளின் தாயகமான அடாமியில் சுமார் 21,000 வீடுகளுக்குஅரசு வெளியேற்ற எச்சரிக்கையை வெளியிட்டதால் உடனடியாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை அப்பகுதி அதிகாரிகள் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.