வி.ஏ.ஓ.,வுக்கு கத்திக்குத்து

ஈரோடு மாவட்டம், குருசாமிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 30; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் வி.ஏ.ஓ.,. கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்

பாக்யராஜ், 26; காட்டுநெமிலி வி.ஏ.ஓ., மதுரையில் நடந்த கிராம உதவியாளர் மாநாட்டில் வி.ஏ.ஓ.,க்கள் குறித்து பேசிய கருத்துக்களை ‘வாட்ஸ் ஆப்’பில் இருவரும் பதிவிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த பாக்யராஜ், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உளுந்துார்பேட்டை தெரசா நகரில் தங்கியுள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றார்.

அவரை கத்தியால் குத்தியபோது தடுத்ததால், கை விரல்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. கோபாலகிருஷ்ணன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உளுந்துார்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?