காஷ்மீர் என்கவுண்ட்டர்: முக்கிய தளபதி உள்பட 2 பேர் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்பின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைமை தளபதியான அப்பாஸ் ஷேக் ஆவார். அவர், டி.ஆர்.எப். என்ற அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். மற்றொருவர் துணை தலைவர் சகீப் மன்சூர்.

அவர்கள் 2 பேரும் அலூச்சி பாக் என்ற இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் சம்பவ பகுதியில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.