சிவபாலனை நியமனம் செய்துள்ளோம் என்பது மகிழ்ச்சி தருகிறது- கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக (மாநில செயலாளர்) திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் பார்வையாளராகவும் சு.சிவபாலனை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என கமல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட சு.சிபாவலனின் வருகை நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வழக்கம்போல் சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.