மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் படம் திறப்பு !

கலைஞர் கருணாநிதி உருவப்படம் சட்டபேரவையில் திறக்கப்பட்டுவிட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.மேலும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக 5 முறையும் சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி. சீர்திருத்த சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.

தமிழக மக்களை காந்தக் குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. மேலும், கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்ததை பார்த்து முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன் என்று தெரிவித்தார்.