சிக்கிய மீரா மிதுன் வரும் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவல் !

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன்.இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.மேலும் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் மீரா . சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் எழுந்தன.

அவர் மீது போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன் தலைமறைவானார்.

சென்னை மத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை கைது செய்துள்ளனர்.இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு அவரை சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.