தமிழகத்தின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் !

தமிழகத்தின் இயல், இசை நாடக மன்றத்தின் தலைநகராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் பாதுகாத்து வளர்க்கவும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு கலைப் பணித் திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.

மேலும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதோடு, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என அறிவித்துள்ளார்.

வாகை சந்திரசேகர் ,இவர் 1991 ஆம்‌ ஆண்டு முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச்‌ சிறப்பித்தார்‌.300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.