நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை அடகு வைத்த கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.