ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி..!

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ., (தேசிய விசாரணை நிறுவனம்) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை எடுத்தது குறித்த வழக்கு விசாரணை, அவர்களுக்கு அண்டை நாடுகளுடனான தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படுகின்றன. சிலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்து, நிதியுதவி பெற்றது, அதற்காக ஹவாலா வழியில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது குறித்த விவரங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.