Jammu-Kashmir Encounter: ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

jammu-kashmir-encounter-big-action-against-terror-four-terrorists-including-a-pakistani
4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Jammu-Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். புல்வாமாவின் ஷுவாக்லன் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திலும் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் – பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதேபோல் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்