புதுக்கட்சி துவக்குகிறார் ஷர்மிளா

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா,47 ஜூலை 8-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவக்க போவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., – காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார். 2019ல் பார்லி. லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். கட்சி பெரும்பான்மை பெற்றது. ஜெகன் மோகன் முதல்வரானார். அந்த தேர்தலில், ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, 47 தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் .