காங்கிரஸ் செயல்படவேண்டிய தருணம் இது- கபில் சிபல்

கபில் சிபலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கார்த்திக் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் என்று வரும்போது காங்கிரஸை நாட்டு மக்கள் பயனுள்ள மாற்றுச் சக்தியாக கருதவில்லை என்ற கபில் சிபலின் கருத்தை அடுத்து, காங்கிரஸ் சுய விசாரணை செய்யவேண்டிய, செயல்படவேண்டிய தருணம் இது என்று அக்கட்சி எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கபில் சிபலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.