சர்வதேச பூனை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2002 இல் சர்வதேச விலங்கு நல வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது.இன்றைய நாள் பூனைகளுக்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் உதவுவதற்கான வழிகளைப் பற்றி அறியும் நாள்.
2020 ஆம் ஆண்டில் சர்வதேச பூனை தினத்தின் பாதுகாவலர் சர்வதேச பூனை பராமரிப்புக்கு அனுப்பப்பட்டது, இது தொண்டு நிறுவனமாகும் .மேலும் இது 1958 முதல் உலகளவில் வீட்டு பூனைகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
உலகில் 40 வகையான பூனை இனங்களில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பூனைகள் உலகில் உள்ளன.பூனைகள் மணித்தியாலத்திற்கு 30 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.
பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும் 14 மடங்குகள் அதிகமானதாகும்.மிகவும் பழமையான காலத்தில் இருந்து செல்ல பிராணிகள் என்று வீட்டில் வளர்க்கப்படுவது பூனை.இந்நிலையில், இன்று பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் செல்லப்பிராணிகளை நேசிப்போர் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.



