ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சதீஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார்.

சூப்பர் ஹெவி வெயிட் பிரிவுக்கான குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோப் உடன் சதீஷ்குமார் பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பம் முதலே உஸ்பெகிஸ்தான் வீரரின் கையே ஓங்கியிருந்தது. ஏற்கெனவெ காயமடைந்திருந்த சதீஷ்குமாரால், எதிராளியின் குத்துகளை எதிர்கொள்ள முடியவில்லை.

அவரது முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடியே போட்டியில் தொடர்ந்தார். 3 சுற்றுகள் முடிவில் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த சதீஷ்குமார், ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறினார்.