உலக சுகாதார நிறுவன அறக்கட்டளை தலைமை நிர்வாகியாக இந்தியர்

உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை 2021-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட உள்ளது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த இவர், பல அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனத் தலைமை முடிவெடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை, வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.