முதியவர்கள் உள்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 82.25 விழுக்காடு கரோனா பாதிப்புகள், கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பிகார், குஜராத் ஆகிய ஒன்பது மாநிலங்களில் பதிவாகின்றன.

இந்நிலையில், வரும் 16ஆம் தேதிமுதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் உள்பட 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.