இலங்கை அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராகுல் டிராவிட் பயிற்சியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் பல இளம் வீரர்கள், 6 புதுமுகங்கள் இத்தொடருக்கு தேர்வாகியிருந்தனர். அதேபோல் இலங்கை அணி புதிய கேப்டன் ஷனாகா தலைமையில் களமிறங்குகிறது.

கொழும்புவில் இன்று (ஜூலை 18) துவங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டர் ஷனாகா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இலங்கை அணியில் பனுகா ராஜபக்சே அறிமுக வீரராக விளையாட உள்ளார். அதேநேரத்தில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.