கொரோனா என்ற கொடிய தொற்று உலக மக்களை ஆட்டி படைக்கிறது.மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனவால் அணைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர் குறிப்பாக மருத்துவர்களுக்கு அதிகம் பாதிப்பு.தற்போது கொரோனா 2வது அலையில் இந்தியாவில் 798 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டெல்லியில் 128 பேர் உயிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பீகாரில் 115 மருத்துவர்களும், உத்திரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 51 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் இறந்தவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.