பிரபல நகைக்கடையில் ஐடி ரெய்டு – அரியலூர் !

அரியலூர் பெரிய கடை தெருவில் இயங்கி வருகிறது தண்டபாணி ஜுவல்லரி. இக்கடையில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், மேலும் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 52 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணம் அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வருமானவரி துறையினர் மூன்று பைகள் மற்றும் ஒரு இரும்பு சூட்கேசுகளை வாகனத்தில் எடுத்துச் சென்றனர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வருமான வரித்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது.