எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டாம்- மம்தா

மருத்துவமனையில் இருக்கும் மம்தா தொண்டர்களுக்காக வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ,” நான் கடுமையாக காயமடைந்தேன் என்பது உண்மை. கை மற்றும் கால்களில் வலியை உணர்கிறேன்.

நேற்று தலை மற்றும் மார்பு பகுதியில் வலியை உணர்ந்தேன். என்னையை கடுமையாக தள்ளினர் என்னுடைய கால்கள் காரில் கடுமையாக மோதியது. அனைவரும் அமைதியை காக்க வேண்டும் என விரும்புகிறேன். அசவுகரியமான எந்த செயலையும் யாரும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு, மூன்று நாள்களில் வீடு திரும்பிவிடுவேன் என நம்புகிறேன். எனக்கு சில பிரச்னைகள் இருக்கிறது நான் சமாளித்துவிடுவேன். எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டாம். சில நாள்களில் நான் பிரசாரத்துக்கு வந்துவிடுவேன்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என உருக்கமாக கூறியுள்ளார்.