கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி??

கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்

கோவைக்காய் – 200 கிராம்

கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கடுகு – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வறுத்த முந்திரி – சிறிதளவு

எண்ணெய், நெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை : கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.