உங்கள் கூந்தல் பலவீனமாக உள்ளதா ..ஆரோக்கியமாக மாற்ற இதோ சில டிப்ஸ் !

நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.தினமும் மதிய உணவில் அரைக்கீரை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நீட கூந்தல் வளரும்.

வைட்டமின் இ சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும்.மருதாணியையும் ,கருவேப்பில்லை அரைத்து சாறெடுத்து சமஅளவு தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தடவி வர முடி கருமையாகவும் ,பளபளப்புடன் நீண்டு வளரும்.முளைக்கட்டிய கருப்பு கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர தலைமுடி நன்கு வளரும்.